Home » » அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் வீடொன்றில் தற்கொலை அங்கிகள்

அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் வீடொன்றில் தற்கொலை அங்கிகள்


அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், குண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் இரும்பு உருளைகள் பொருத்தப்பட்ட தகடு மற்றும் சில உபகரணங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று நடத்திய தேடுதலில் கைது செய்யப்பட்ட நபர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த பொருட்களை மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை திருகோணமலை - நிலாவெளி இறக்கண்டி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்டு தேடுதலில் போர் தளபாடங்கள் கைப்பற்றுள்ளன.
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை சோதனையிட்ட போது ,அவரிடம் இருந்து 8 ஜெலட்னைட் கூருகள், 160 டெட்டனேட்டார்கள், இலத்திரனியல் பியூஸ் என்பவற்றை கைப்பற்றியதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் லெப்டினட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் 43 ஜெலட்னைட் கூருகள், 55 டெட்டேனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |