Home » » முழு உலகுமே கடும் அதிர்ச்சியில்; வெளிநாட்டவர்கள் பலர் உடல் சிதறிப் பலி!

முழு உலகுமே கடும் அதிர்ச்சியில்; வெளிநாட்டவர்கள் பலர் உடல் சிதறிப் பலி!

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் பலர் உயிரிழந்திருப்பதுடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எனினும் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் இழப்புக்கள் தொடர்பில் சரியான தகவல்களை உடனடியாக கூற முடியாதுள்ளதாக பொலிஸ் தலைமையகம்அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சீனாவிற்கு சொந்தமான நட்சத்திர சுற்றுலா விடுதியான சங்கிரி லா ஹோட்டலின் உணவகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பல வெளிநாட்டவர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் எராளமானோர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை அந்த உணவகம்அமைந்திருந்த பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக அங்கு சென்றுள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதனைத்தவிர சினமன் கிறாண்ட் மற்றும் சிறிலங்கா ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களிலும் பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |