வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள 'போனி' சுறாவளி மேலும் வலுவடைந்து, நாளை மாலை இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இது 24 மணித்தியாலங்களில் பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஏப்ரல் 30ஆம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாக திரும்பி வடகிழக்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அதேபோல், மேல், தென், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 150 மி.மீ அளவான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கடல் பிராந்தியங்களில் மழையுடன் கூடிய அதிகரித்த காற்று வீசுவதன் காரணமாக, கிழக்கு மற்றும் தென்கிழக்காக வங்காள விரிக்குடாவில் ஆழ்கடல் பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் வரை கடல்தொழிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments: