இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தின் சந்தேகநபர்கள் மூவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட்ட 8 இடங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனினும் நேற்று முன்தினம் நடந்த சோதனையின் போதும், தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையிலேயே இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கேரளாவில் கைது செய்துள்ளனர் அதிகாரிகள்.
0 comments: