Home » » வெடி குண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய தகவல்! அம்பாறையில் பதற்றம்

வெடி குண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய தகவல்! அம்பாறையில் பதற்றம்

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து அம்பாறை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்காவில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் சோதனைகள் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் பொத்துவில் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாகவும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஊரணி பாலத்தடி மற்றும் திருக்கோவில் தம்பிலுவில் பொது நூலகம் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை ஆகிய இடமங்களிலும் இன்றும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை வீதி றோந்து நடவடிக்கைகளிலும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை கல்முனை உள்ளீட்ட அம்பாறை மாவட்டம் முழுவதுமாக பிரதான வீதிகளிலும் இராணுவம் நகரில் இருந்து வெளியேறும் மற்றும் நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு சோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவர் வாடகைக்கு வீடு ஒன்றினைப் பெற்று தங்கி இருப்பதாக தெரிவித்து அங்கு விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையின் ஈடுபட்டனர்.
எனினும் சந்தேக நபர் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு குறிந்த நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |