மஸ்கெலியா, நல்லதண்ணி பகுதியில் தொலைதொடர்பு உபகரணங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பீக்வீவ் தோட்ட வீடு ஒன்றில் இருந்து அதிசக்திவாய்ந்த தொலைத் தொடர்பு உபகரணங்கள் மற்றும் ரிமோட் கொண்ட்ரோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் அரபு நாடு ஒன்றில் உயர்பதவி வகிப்பவரென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் இது வரை கிடைக்கப்பெறவில்லை.
0 comments: