பயங்கரவாத தடுப்பு பொலிஸார் நேற்றைய தாக்குதல் சம்பவம் நடந்த அம்பாறை கல்முனை சாய்ந்தமருது பகுதிக்கு அதிரடியாக சென்றுள்ளனர்.
அங்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பொலிஸ் தரப்பு கடும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
நேற்றைய மோதலில் பாதுகாப்புத் தரப்புக்கு எவ்வித சேதமும் இல்லையென கூறப்பட்டுள்ளது. ஆனாலும் சில தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் வேறு பல இடங்களும் இன்று படையினரால் முற்றுகையிடப்படலா மென சொல்லப்படுகிறது.
இதேவேளை இராணுவத்தினர் கனரக போர் உந்துகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் யுத்த களம் போல் கிழக்கு காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
0 comments: