Home » » பிரதான தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய மதகுரு கைது

பிரதான தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய மதகுரு கைது


தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட குண்டுதாரியான மொஹமட் சஹரானுக்கு தலைமைத்துவம் வழங்கிய மதகுரு பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்
தாக்குதல் மேற்கொள்வதற்காக மொஹமட் சஹரானை, இந்த மத குரு வழிநடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தெஹிவளை ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் தாக்குதலில் உயிரிழந்த தற்கொலைதாரியின் மனைவியும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |