நீர்கொழும்பு - பெரியமுல்ல பிரதேசத்தில் 15 ட்ரோன் கெமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ட்ரோன் கெமராக்களில் குண்டினை பொருத்தி ஆள் இல்லா விமானம் போல் அதை செயற்பட வைத்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டை வெடிக்க வைப்பதற்கு போட்ட திட்டம் அண்மையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சாய்ந்தமருதில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தீவிரவாதிகளின் ஆயுதங்களில் இந்த ட்ரோன் கெமராக்களும் மீட்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் தற்போது நீர்கொழும்பிலும் இந்த விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: