முப்பது இலட்சம் ரூபா அரசாங்க பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபை செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
|
மோசடி செய்த 30 இலட்சம் ரூபாவுடன், மேலதிகமாக 90 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் பிரதேச சபைக்குரிய வங்கிக் கணக்கில் இருந்து அரசாங்கப் பணம் 30 இலட்சம் ரூபாவைப் பெற்று அரை மணி நேரத்தில் அவரின் சொந்த கணக்கில் வைப்பு செய்துள்ளார். பின்னர் மூன்று, நான்கு மாதங்களின் பின்னர் நிரந்தர வைப்பில் இருந்து தனது சேமிப்புக்கு மாற்றியுள்ளார். பிரதேச சபை அதிகாரிகள் வங்கி முகாமையாளரை ஆதாரப்பூர்வமாக நிறுத்தி மன்றில் சாட்சி வழங்கியுள்ளனர்.
இதன் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» அரச நிதியை மோசடி செய்த அதிகாரிக்கு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை
அரச நிதியை மோசடி செய்த அதிகாரிக்கு மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: