Home » » ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை- பிரித்தானியா தலைமையேற்கிறது!

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை- பிரித்தானியா தலைமையேற்கிறது!

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரித்தானியா கொண்டு வரவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் அடுத்தமாதம், இப்பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான பிரித்தானிய தூதரகம் நேற்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இணை அனுசரணையில் ஏற்கனவே ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் இந்த புதிய பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
அத்துடன், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களை நிலைநாட்டுமாறு இப்பிரேரணையின் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது. பிரித்தானியாவுடன் இணைந்து கனடா, ஜேர்மனி மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளும் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |