எத்தகைய நிலைமையிலும் மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் நேற்று இலங்கை பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது மனித உரிமைகளை முன்னேற்றும் செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் இந்த விடயத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தலையிட்டு இடையூறு செய்ய வேண்டாமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வொன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)
ஐரோப்பிய ஒன்றியம் நேற்று இலங்கை பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது மனித உரிமைகளை முன்னேற்றும் செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் இந்த விடயத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தலையிட்டு இடையூறு செய்ய வேண்டாமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வொன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)
0 comments: