Home » » உணவுகளை கைகளால் தொட்டு விற்பனை செய்ய தடை!

உணவுகளை கைகளால் தொட்டு விற்பனை செய்ய தடை!


மே மாதம் முதலாம் திகதி முதல் உணவுப் பண்டங்களை நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வதனை தடை செய்வதற்கு சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 3 மாத காலங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் அது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் நவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது பெரும்பாலான ஹோட்டல்கள் , சிற்றுண்டிசாலைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் நேரடியாக கைகளால் எடுத்தே விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தடை செய்து கையுறை மற்றும் உபகரணங்கள் மூலம் அதனை எடுத்துக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |