தரம் 1 மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் வரவேற்கும் ” வித்தியாரம்பவிழா ” பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இன்று ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர் ஏ.சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பட்டிருப்பு வலய உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.பாண்டீபன் மற்றும் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா ஆகியோர் பிரதம அதிதியாகவும் , பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்தி ரன் , எம்.சுபேந்திரராஜா , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன் , பழைய மாணவர் சங்க செயலாளர் ரீ.ஐங்கரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பாடசாலை ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பாடசாலை கல்விசாரா உத்தியோஸ்தர்கள் பெற்றோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட மாணவர்கள் இவ்வருடம் முதலாம் தரத்திற்கு அனுமதிபெற்ற மாணவர்களை மாலையிட்டு வரவேற்று பாடசாலை ஆராதனை மண்டபத்திற்கு அதிதிகள் சகிதம்
அழைத்துச்செல்லப்பட்டதோடு சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அழைத்துச்செல்லப்பட்டதோடு சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
0 comments: