Home » » சுவிஸ் விபத்தில் ஈழத்தமிழ்ப் பெண் மரணம்!

சுவிஸ் விபத்தில் ஈழத்தமிழ்ப் பெண் மரணம்!

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பெண் செலுத்தி வந்த கார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.சம்பவத்தில் சர்வாணி சுரேஸ்குமார் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிந்தார். 22 வயதான கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.
சர்வாணி சுரேஸ்குமார் சுவிட்ஸர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப் படுகிறது.இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |