போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாகக் கிணறு அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபா வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் பூநகரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
|
அபிவிருத்தி உத்தியோகத்தரான அந்தப் பெண் உத்தியோகத்தர் பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாவுக்கான காசோலையை வழங்கும்போது 15 ஆயிரம் ரூபா பணம் இலஞ்சமாகக் கோருகின்றார் என்று பயனாளி ஒருவரால் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இலஞ்சப் பணத்தைப் பிரதேச செயலகம் முன்பாக உள்ள ஒரு தேநீர் கடையில் வைத்தே வழங்கப்படுகின்றது என்று ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் கொழும்பில் இருந்து பொலிஸார் சகிதம் வந்திருந்தனர்.
அவர்களில் இருவர் நேற்றுமுன்தினம் சிவில் உடையில் வழிப்போக்கர்கள் போன்று அந்தத் தேநீர் கடையில் தேநீர் அருந்தியுள்ளனர். பயனாளி ஒருவர் காசோலையைப் பெறுவதற்கான லஞ்சப் பணத்தை தேநீர் கடையில் வைத்து அந்த பெண் உத்தியோகத்தரிடம் கொடுத்தபோது, ஒளிப்பட ஆதாரம் சகிதம் அவரைக் கைது செய்தனர்.
இந்த உத்தியோகத்தர் நீண்டகாலம் திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றி சில மாதங்களுக்கு முன்னரே பூநகரிப் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
இலஞ்சம் பெற்றமைக்காக அந்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமையை கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும் உறுதி செய்தார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» ஒரு இலட்சம் ரூபா உதவிக்கு 15 ஆயிரம் ரூபா இலஞ்சம் - வசமாக மாட்டினார் பெண் அதிகாரி!
ஒரு இலட்சம் ரூபா உதவிக்கு 15 ஆயிரம் ரூபா இலஞ்சம் - வசமாக மாட்டினார் பெண் அதிகாரி!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: