Home » » பாண் விலை குறைப்பு?

பாண் விலை குறைப்பு?


சமீபத்தில் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவால் குறைப்பதென தீர்மானிக்கப்படடிருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் வணிக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோருடனான கலந்துரையாடலின் பின்னர் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். .

முன்னைய விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யுமாறு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரு பிரதான நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமது எழுத்து மூல அனுமதியில்லாமல் விலையை அதிகரித்த தயாரிப்பார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |