இலங்கை போக்குவரத்துசபையின் வடக்கு சாலைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் குதிக்க தீர்மானித்துள்ளன. வடக்கிலுள்ள ஏழு தொழிற்சாலைகளில் யாழ்ப்பாண சாலை தவிர்ந்த மிகுதி ஆறு சாலைகளும் இன்று நள்ளிரவில் இருந்து பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ளன.இ.போ.ச தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகயை வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பு நடக்கவுள்ளது.
பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, காரைநகர் சாலைகளின் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண சாலை மாத்திரம் எந்த அறிவித்தலையும் இதுவரை விடுக்கவில்லை.ஏற்கனவே தென் மாகாணத்தில் இ.போ.ச பணியாளர்கள் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்தாயிரம் ரூபா அதிகரிப்பு விவகாரத்தை முன்னிறுத்தி கடந்த மூன்று தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதே கோரிக்கையை முன்னிறுத்தி வடக்கில் இன்றிரவு முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கவுள்ளது.
0 comments: