திருகோணமலை - உவர்மலை பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்தனர். குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 7 சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் மது பாவனையில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞர் குழுவே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments