மீன்மகள் பாட வாவி மகள் ஆடும் மட்டுநகரில் செந்தமிழும், செந்நெல்லும் தவழ்ந்து விளையாடும், மத்தளத்துடன் சல்லரியும் சதங்கை ஒலியும் வானைப்பிளக்கும், கண்டிய அரசனால் சிங்காரக்கண்டி என அழைக்கப்பட்ட பழம்பெரும்
பதியாம் திருப்பழுகாமம்தனிலே கோயில் கொண்டு எழுந்தருளி வரும் அடியார் குறை தீர்க்கும் பத்தினி தாயான பாரத நாயகி திரௌபதைக்கு பெருவிழா இன்று 15.07.2016 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, 20.07.2016ம் திகதி வனவாசமும், 21.07.2016ம் திகதி தவநிலையும், 22.07.2016ம் திகதி தீமித்தலும், மிகவும் விமர்சையாக இடம்பெறும்.
0 Comments