Home » » கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆணின் சடலம் மீட்பு

கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் ஆணின் சடலம் மீட்பு

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் 44 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்லாறு காளி கோயில் வீதியை பிறப்பிடமாகக் கொண்ட தம்பிராசா வரதரதசன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனியார் பேரூந்துகளில் நடத்துனராகவும். மற்றும் கடைகளிலும் தொழில் புரிந்து வருபவர்  எனவும் பஸ் தரிப்பு நிலையத்திலுள்ளவர்கள் கூறினர்.

கல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து கீழ்த் தளத்தில் வீழ்ந்திருக்கலாம் எனவும் அதனால் அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவரது தலையில் பெரியளவில் அடிபட்ட இரத்தக் காயம் காணப்படுகிறது எனவும் விசாரணைகள் மூலமே மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபார் தெரிவித்தார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |