Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு

தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.
வறிய மக்களுக்கு வீடு என்னும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 14 வீடுகள் அமைக்கப்பட்டு இந்த வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தொழில்நுட்பட உத்தியோகஸ்த்தர் சு.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன் போது கருத்துரைத்த, தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், அரசாங்கம் வழங்கும் உதவிகளுடன் மக்களும் பங்களிப்பினை வழங்கும் போதே அவை பூரண வெற்றியை அடையும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்கீழ் இன்று உரிமை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட இன்றைய நாளில் பிரதேச செயலகத்துக்கு ஒரு வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட உதவி முகாமையாளர் ஜி.நிர்மலராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments