Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெற்றிக்காக எனது முழுமையான ஆதரவினை வழங்குவதுடன் மக்கள் அணியினை ஒன்று திரட்டுவேன் சோபித தேரர்

நாட்டின் ஜன­நா­ய­கத்­தையும் உரி­மை­க­ளையும் வென்­றெ­டுக்கும் எமது போராட்­டத்­திற்­கான சிறந்த வீர­னாக மைத்­தி­ரி­பால கிடைத்­துள்ளார். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி அதி­கா­ரத்­தினை பகிரும் இவர்­களின் முயற்­சிக்கு எனது முழு ஆத­ர­வி­னையும் வழங்கத் தயார் என குறிப்­பிட்ட கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர்இந்த வெற்றி தனி ஒரு­வ­ருக்கு கிடைத்த வெற்­றி­யல்ல. முழு சமூ­கத்­திற்­கு­மான வெற்­றி­யா­கவே கருத வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.
பொது வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்கள் நேற்று கோட்டே நாக­வி­கா­ரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரரை சந்­திக்க சென்­றி­ருந்­தனர். சந்­திப்பின் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்­பி­டு­கையில்
நாட்டில் சுயா­தீன சேவை­க­ளையும் ஜன­நா­ய­கத்­தையும் மக்கள் ஆட்­சி­யி­னையும் ஏற்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்­திலும் அதற்­கான தேவை­யினை உணர்ந்­துமே சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் ஊடாக பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்கும் முயற்­சி­யினை மேற்­கொண்­டி­ருந்தேன்.
எமது பல நாள் முயற்­சியில் இன்று அதற்­கான தலைவர் கிடைத்­துள்ளார். மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் நாட்டின் பாது­காப்­பிற்­கா­கவும் தனது பத­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் துறந்து இந்த நாட்­டிற்­காக மாபெரும் அர்ப்­ப­ணிப்­பினை மைத்­தி­ரி­பால சிறி­சேன செய்­துள்ளார்.
அதற்கு நாம் அனை­வரும் நன்றி தெரி­விக்க வேண்டும். அதேபோல் இந்த சேவைக்­காக நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து எமது ஒத்­து­ழைப்­பையும் முழுப் பலத்­தி­னையும் வழங்க வேண்டும்.
மேலும் நாட்டில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் மக்­களின் ஜன­நா­யக உரி­மை­களை வெற்றி கொள்­வ­தற்­கு­மான தலைவர் கிடைத்து விட்டார்.
எனவே இவரின் வெற்­றிக்­காக எனது முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­கு­வ­துடன் சமூக நீதிக்­கான இயக்­கத்­தினை பயன்­ப­டுத்தி மக்கள் அணி­யினை ஒன்று திரட்­டுவேன். அதேபோல் இதில் கிடைக்கும் வெற்றி தனி ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் வெற்றியல்ல. இது முழு நாட்டிற்கும் முழு சமூகத்திற்கும் கிடைக்கும் வெற்றி. இதனை சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments